கல்வி நிலையங்கள் மற்றும் திரையரங்குகளை திறக்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் அமலில் இருந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அக்டோபர் 31ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், மேலும் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நவம்பர் 30-ம் தேதிவரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
புதியதாக அறிவிக்கப்பட்ட தளர்வுகள் பின்வருமாறு:
- 9 முதல் 12 வகுப்பு வரையிலான வகுப்புகள் நவம்பர் 16-ம் தேதி முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
- கல்வி நிலையங்கள் மற்றும் பணியாளர் விடுதிகளும் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
- அனைத்துக் கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், மற்றும் கல்வி நிறுவனங்களும் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி
- திரையரங்குகளை வரும் 10 ஆம் தேதி முதல், 50% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- வணிக வளாகங்கள், மல்டிபிளக்ஸ் வளாகங்களில் உள்ள திரையரங்குகளுக்கும் 50% இருக்கைகளுடன் மட்டுமே செயல்பட அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
- கோயம்பேட்டில் பழக்கடை மொத்த வியாபாரத்திற்கு நவம்பர் 2-ம் தேதி முதல் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது
- காய்கறி சில்லறை வியாபாரக் கடைகள் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்படலாம்
- நீச்சல் குளங்கள், கடற்கரைகள், சுற்றுலாத் தலங்கள் மறு அனுமதி வரும் வரை திறக்கப்படாது என தமிழக அரசின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.