வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்றுள்ளதால் தமிழகம் உள்ளிட்ட 3 மாநிலங்களில் அதீத கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக தென்னிந்திய மாநிலங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனிடையே, வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதைத்தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் நேற்று அதிகாலை பெய்த கனமழையால் காலம்புழா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் தற்போது அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த நிலையாக மாறியுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் தெற்கு கர்நாடகா, கேரளா ஆகிய பகுதிகளிலும் தமிழகத்தில் மலைத்தொடர்களை ஒட்டிய பகுதிகளிலும் அடுத்த 5 நாட்களுக்கு அதீத கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.