கேரள சட்டமன்றத்தில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவனந்தபுரம் :
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த ஒரு மாத காலமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே மத்திய அரசு விவசாய அமைப்பினருடன் 5 முறை அமைதி பேச்சுவார்த்தை நடத்தியும் அதற்கான தீர்வு இதுவரை எட்டப்படவில்லை.
இதையடுத்து விவசாயிகளின் போராட்டதை முடிவு கொண்டுவர நேற்று விவசாய அமைப்பினருடன் மத்திய அரசு 6 ம் சுற்று பேச்சுவார்த்தையை நேற்று நடத்தியது.
விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு மாநிலங்கள் தொடர்ந்து குரல் எழுப்பிவந்தது. இந்த நிலையில், கடந்த 23 ம் தேதி புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதற்காக கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற போவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். இதற்கு கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Read more – அன்பிற்குரிய தமிழக மக்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி
தற்போது, எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு கொண்டுவந்த 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவருவதாக கேரள சட்டமன்றத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தீர்மானம் கொண்டு வந்தார். அதனை தொடர்ந்து பேசிய அவர், விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்தால் அது கேரளாவை கடுமையாக பாதிக்கும், மற்ற மாநிலங்களிலிருந்து உணவுப் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்பட்டால் கேரளா பட்டினி கிடக்கும் என்பதில் சந்தேகமில்லை என்று தெரிவித்துள்ளார்.