திருவண்ணாமலை மாவட்டத்தில் தந்தூரி சிக்கன் சாப்பிட்டதால் மாணவன் இறந்துபோனதாக கூறப்படும் நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்தவர் திருமுருகன். அங்குள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் இவர், கடந்த 24-ம் தேதி நண்பர்களுடன் வெளியே சென்றிருந்த போது தந்தூரி சிக்கன் சாப்பிட்டுள்ளார்.
அன்றைய நாளே அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதை தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 29-ம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பெற்றோர் அளித்த புகாரின் பேரில், மாணவன் சாப்பிட்ட ஹோட்டலில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர். இதையடுத்து உணவகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.