ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் 300 பேர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அவரது முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
சென்னை :
சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக ரஜினி அரசியலுக்கு வருவார் என்று காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பேரதிர்ச்சி காத்திருந்தது. தன் உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வரப்போவதில்லை என்று ரஜினி அறிவித்தார்.
இலவு காத்த கிளிபோல இருந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஒரு அறப்போராட்டத்தை நடத்தினர். இதனால் கோபமடைந்த ரஜினி மீண்டும் ஒரு அறிக்கை மூலம் தன் நிலைப்பாட்டை தெரிவித்தார். இதனால் அவர் அரசியலுக்கு வரப்போவதில்லை என்பது உறுதியானது. இதையடுத்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் இப்போது மாற்றுக் கட்சியில் சேர முடிவு செய்துள்ளனர்.
Read more – தலையில் மொட்டை.. நெத்தியில் பட்டை.. சசிகலா விடுதலைக்காக நேற்றிக்கடனை நிறைவேற்றினாரா ஆர்.பி.உதயகுமார் ?
இதையடுத்து, ராமநாதபுரம், தேனி, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த 300 க்கும் அதிகமான ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்தவர்கள் திமுகவில் தங்களை இணைத்து கொண்டனர். திருவள்ளூர் மாவட்டம், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் ஏ.சுந்தரி, ராமநாதபுரம் மாவட்ட இணை செயலாளர் செந்தில்வேல், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஒன்றியத்தை சேர்ந்த சுப்புராஜ் மற்றும் வடசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் கீதா ஆகியோர் தலைமையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் இணைந்தனர்.
இந்த கூட்டத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி., ராமநாதபுரம் மாவட்ட கழகப்பொறுப்பாளர் காதர் பாட்சா, முத்துராமலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.