கொளத்தூர் தொகுதியில் அதிமுக செய்தித்தொடர்பாளர் திருநங்கை அப்சரா ரெட்டி போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை :
அ.தி.மு.க சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் மார்ச் 4 ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. மாவட்ட வாரியாக வேட்பாளர் நேர்காணல் நடைபெற இருக்கிறது என்று அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒன்றாக அறிவித்துள்ளனர்.
இந்தநிலையில், நேற்று அ.தி.மு.க. செய்தித்தொடர்பாளர் திருநங்கை அப்சரா ரெட்டி திமுக தலைவர் ஸ்டாலினின் வெற்றி தொகுதியான கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :
Read more – நேற்று அவர், இன்று ஸ்டாலின்… நாளை ? ஆனால் திமுகவில் என் பயணம் இதுவே !
அ.தி.மு.க. தலைமை கொளத்தூரில் எனக்கு வாய்ப்பு அளித்தால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை என்னால் தோற்கடிக்க முடியும். அந்த நம்பிக்கையும், சக்தியும் எனக்கு உள்ளது. அ.தி.மு.க. அரசு தொடர்ந்து நீடிக்கவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். திருநங்கைகளுக்கு ஏராளமான நலத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டது அ.தி.மு.க. ஆட்சியில்தான் என்று தெரிவித்துள்ளார்.