எங்கள் ஆட்சி காலத்தில் எதுவுமே செய்யாமல் தான் நாங்கள் கட்டிய பாலத்தில் முக ஸ்டாலின் காரில் சென்றாரா என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற 2 நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் வெற்றி பெரும் முனைப்பில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை மாலையுடன் பிரச்சாரம் முடிய இருப்பதால் அனைத்து கட்சிகளும் முண்டியடித்து கொண்டு ஓட்டு கேட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், சேலம் சங்ககிரி கோட்டை மைதானத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி திமுக தலைவரை கடுமையாக தாக்கி பேசினார். அதில், 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெரும் என்று முக ஸ்டாலின் பகல் கனவு கண்டு வருகிறார். திமுக ஆட்சியில் மக்கள் நிம்மதியாக இருக்கமுடியாது என்று அவர்களுக்கே தெரியும். 4 ஆண்டுகளுக்கு முனைவு என்னை யார் என்றே தெரியாது என்று தெரிவித்த, திமுக தலைவர் இப்பொழுது அனுதினமும் என்னை பற்றி மட்டுமே பேசிவருகிறார் என்றார்.
Read more – அரசியல்வாதியாக நான் பிறந்த ஊர் கோவை… இம்மக்களுக்கே எனது சேவை… பிரச்சாரத்தில் கமல்ஹாசன்
தொடர்ந்து பேசிய அவர், சேலம் மாவட்டத்தில் எங்கள் ஆட்சியில் எதுவுமே செய்யவில்லை என்று சொல்லும் முக ஸ்டாலின், நாங்கள் கட்டிய பாலத்தில் காரில் போனாரா ? இல்லை பாம்பு மற்றும் பல்லி போல் ஊர்ந்து போனாரா ? என்று கேள்வி எழுப்பினார்.