ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டபோது உதயநிதிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சோளிங்கர் :
தமிழகத்தில் இன்னும் 3 மாதங்களில் சட்டசபை தேர்தல் வர உள்ளநிலையில் தமிழகத்தில் ஆட்சி அமைக்க அனைத்து அரசியல் கட்சியினரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடுத்து நடைபெறும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதேபோல் நேற்று ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு அவர் கூறியதாவது : திராவிட முன்னேற்ற கழகம் ஒரு குடும்ப அரசியல், வாரிசு அரசியல் என்பதை நாம் தொடர்ந்து பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.
ஏற்கனவே கருணாநிதி, அடுத்தது ஸ்டாலின், இப்பொழுது உதயாநிதி புதிதாக முளைத்துள்ளார். திமுக அரசியல் வாரிசு வழியாக மேலே வந்த அவர். தற்போது அதிமுகவின் அமைச்சர்களை தொடர்ந்து கிண்டல் செய்து வருகிறார். கருணாநிதி பேரன், ஸ்டாலினுடைய மகன் என்பதால் தான் நீ பேசும் பேச்சுக்களை மக்கள் கேட்டு வருகிறார்கள். எங்களை போல் சாதாரண கிளைக்கழகத்தில் இருந்து மாவட்ட பொறுப்பு, மாநில பொறுப்பு, சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் அதன்பிறகு முதலமைச்சர் என வந்திருந்தால் அதனுடைய அருமை மற்றும் கஷ்டம் புரிந்திருக்கும்.
Read more – இன்றைய ராசிபலன் 10.02.2021!!!
இன்னும் 3 மாத காலம் மட்டுமே உங்களது மற்றும் உங்கள் தந்தையின் வாய் பொய் மட்டுமே பேசும். அதற்கு பிறகு திராவிட முன்னேற்ற கழகம் என்ற ஒரு கட்சியை தமிழகத்தில் இருக்காது. ஆகவே அளந்து பேசுங்க உதயநிதி அவர்களே என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் செய்த சாதனையை எல்லாம் பட்டியலிட்டு வெளிப்படுத்திக் கொண்டு வருகிறோம், அதை சிறப்பாக செயல்படுத்தியும் உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.