திராவிட கட்சிகள் குறித்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை :
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் ஆட்சி அமைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான பழ. கருப்பையா சமீபகாலமாக தமிழகத்தில் திமுக – அதிமுக கட்சிக்கு எதிராக மாற்று அரசியல் வேண்டுமென்று மக்கள் நீதி மய்யத்தில் இணைந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
ஏற்கனவே இவர், தேசிய காங்கிரஸ், ஜனதாதளம், திமுக, அதிமுக, மதிமுக என ஆறு கட்சிகளில் இருந்த இவர் தற்போது ஏழாவது கட்சியாக மக்கள் நீதி மய்யத்தில் இணைந்து உள்ளார். தற்போது மக்கள் நீதி மய்யத்திற்கு ஆதரவாக திராவிட கட்சிகளும் எதிராக பிரச்சாரம் செய்கிறார்.
Read more – தமிழகத்தில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை.. இதில் எங்கிருந்து வெற்றி நடை.. உதயநிதி கேள்வி
அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்து பேசிய பழ.கருப்பையா கூறியதாவது ; மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்து புதியதொரு தமிழகத்தை உருவாக்கும். ஏற்கனவே கடந்த கால ஆட்சியாளர்களாக இருந்த அதிமுக பெண்கள் காதில் இருக்கும் கம்மலை அறுபவன். ஆனால் திமுக காதையே அறுபவன் என்று விமர்சனம் செய்துள்ளார்.