தமிழக பா.ஜ.க. துணை தலைவர் அண்ணாமலையின் வேட்புமனு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
அரவக்குறிச்சி :
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் ஆட்சியமைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு நேற்றே கடைசி நாள் என்பதால் அனைத்து தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் சூடுபிடித்தது. இதுவரை தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தோர் எண்ணிக்கை 5,000 திற்கு அதிகமானோர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், தமிழக பாஜக துணை தலைவரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை பாஜக சார்பில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். தற்போது அண்ணாமலை தன் மீதான வழக்குகள் குறித்து வேட்பு மனுவில் தாக்கவில்லை என்று எதிர்க்கட்சியினர் புகார் அளித்தனர். இதனால் வேட்புமனுவை தேர்தல் அதிகாரிகள் சிறிது நேரம் நிறுத்தி வைத்து பின்னர் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு அவரது மனு ஏற்கப்பட்டது.
Read more – கண்ணுக்கு தெரியாத காற்றில் ஊழலை கட்டி இழுத்தவர்கள் திமுக – எடப்பாடி பழனிசாமி தாக்கு
அதேபோல், அதிமுக சார்பில் சைதை தொகுதியில் போட்டியிடும் சைதை துரைசாமியின் வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.