போடியில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அலுவலகம் அருகே வருமான வரித்துறையினர் சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.
போடி :
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற 2 நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் வெற்றி பெரும் முனைப்பில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் பண பட்டுவாடாவை தடுப்பதற்காக காவல் துறையினர் மற்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி கணக்கில் வராத பணம் மற்றும் உடைமைகளை கைப்பற்றி வருகின்றனர்.
ஏற்கனவே தமிழகத்தில் மிக முக்கிய அரசியல் பிரமுகர்களான திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை, அதிமுக அமைச்சர் எம்.சி. சம்பத், கரூர் தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, திமுக முன்னாள் அமைச்சர் மு.வ. வேலு ஆகியோர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
Read more – பிரச்சாரத்தின்போது ஓட்டுக்கேட்டு கோழிக்கறி வெட்டிய அமைச்சர்… வைரலாகும் புகைப்படம்..
இந்தநிலையில், தமிழக துணை முதல்வரும், போடி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஓ . பன்னீர் செல்வம் அலுவலகம் அருகே சோதனை நடைபெறுகிறது. அதிமுகவை சேர்ந்த தேனீ மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் குறிஞ்சி மணி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதேபோல், திமுக வேட்பாளர் ரகுபதியின் ஆதரவாளரான ராமத்திலகம் மங்களராமன் என்பவர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.