Wednesday, December 17, 2025
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021

வாக்களிப்போம் தமிழ்நாடு இளைஞர் கட்சி… மீட்டெடுப்போம் ஊழல் இல்லா ஆட்சி…

April 3, 2021

சகாயம் ஐஏஎஸ் ஆதரவுடன் தமிழ்நாடு இளைஞர் கட்சி வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஊழல் இல்லா ஆட்சியை அமைக்க இருக்கிறது.

மெரினா என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு போராட்டம். 2017ம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தை தமிழர்கள் யாரும் மறக்க முடியாது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு பீட்டா நிறுவனத்தின் அழுத்தத்தினால் தடை விதிக்கப்பட்ட நிலையில், தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மெரினாவில் திரண்டு கிட்டத்தட்ட 20 நாட்களாக போராடி ஜல்லிக்கட்டிற்கான தடையை தகர்த்தெறிந்தனர். தமிழர்களின் இந்த உணர்வுப்பூர்வமான போராட்டம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்ததுடன் தமிழனின் பெருமையை உலகமெங்கும் பறைச்சாற்றியது.

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

தூய்மைப்பணியாளர்களுக்கு ஆதரவாக திலகபாமா!

காஸாவிற்கு ஆதரவாகத் தீர்மானம் – மு.க.ஸ்டாலின்

இந்த ஜல்லிக்கட்டு போராடத்தில் இருந்து பிறந்தது தான் ”தமிழ்நாடு இளைஞர் கட்சி” எனும் புதிய கட்சி. அரை நூற்றாண்டாக தமிழகத்தை திராவிட கட்சிகள் ஆட்சி செய்திட நேர்மைக்கே அடையாளமாய் திகழும் சகாயம் ஐ.ஏ.எஸ். அவர்களை தலைமையாய் ஏற்றுக் கொண்ட இந்த தமிழ்நாடு இளைஞர் கட்சி புதிய குழந்தையாய் 2021ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் சென்னையின் மதுரவாயல் தொகுதியில் வீரமிக்க தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் இளம் வேட்பாளர் கு.சண்முகம் போட்டியிடுகிறார். தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிய சின்னம் “ மோதிரம்”. சகாயம் ஐ.ஏ.எஸ்.அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழ்நாடு இளைஞர் கட்சி மற்றவர்களை காட்டிலும் சற்று வித்யாசமாகவே திகழ்கின்றனர். பல ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்த முன்னணி கட்சிகள் இலவசங்களை கூறி வாக்குறுதி சேகரித்து வரும் சூழலில் தமிழ்நாடு இளைஞர் கட்சி வேட்பாளர் கு.சண்முகமோ வெற்றிப் பெறுவதற்கு முன்னதாக தொகுதி மக்களுக்கு தனது வாக்குறுதிகளை பத்திரமாக எழுதி கொடுத்து வாக்கு சேகரிக்கின்றனர்.

தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் போட்டியிடும் சண்முகம் தனது மதுரவாயல் தொகுதியில் பட்டா இல்லாத வீடுகளுக்கு பட்டா பெற்று தரப்படும், அயப்பாக்கம், அடையாளம்பட்டு, வானகரம் ஊராட்சிகளை மாநகராட்சியில் இணைக்க நடவடிக்கை எடுக்கபப்டும், சட்டமன்ற உறுப்பினருக்கு வருடம் தோறும் அளிக்கப்படும் மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியை மக்கள் நலனுக்கு செலவு செய்யப்படும், லஞ்சம், ஊழல் இல்லாமல் ஆண்டுதோறும் எனது சொத்து மதிப்பு சமர்ப்பிக்கப்படும், தினம் ஒரு பகுதிக்கு நேரில் சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்து அதனை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என பத்திரம் எழுதி கொடுத்துள்ளார்.

மேற்கண்ட இந்த வாக்குறுதிகளை 3 ஆண்டுகளில் தான் நிறைவேற்ற தவறினால் தனது பதவியை ராஜினாமா செய்வேன் எனக்கூறி பத்திரத்தில் சண்முகம் கையெழுத்திட்டுள்ளார். இதுமட்டுமின்றி தான் வெற்றி பெற்றால் மதுரவாயல் தொகுதிக்கு நிறைவேற்ற உள்ள திட்டங்களையு கு.சண்முகம் கூறியுள்ளார். அதாவது, பட்டா இல்லாத வீடுகளுக்கு போராடி பட்டா வாங்கி தருவது, அயப்பாக்கம், வானகரம், அடையாளம்பட்டு ஆகிய மூன்று ஊராட்சிகளும் மாநகராட்சியுடன் இணைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை கொடுத்துள்ளார்.

தொகுதி இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு வருடத்திற்கு ஒரு முறை போட்டிகள் நடத்தப்படும், அனைத்து மாணவர்களுக்கும் பயிற்சி வகுப்புகள் வார்டு தோறும் நடத்தப்படும் (Language,Dance, Music Karate, Singing, Karate, Silambam etc), அனைத்துப் பகுதிகளுக்கும் கண்காணிப்பு கேமரா சிசிடிவி அமைக்கப்பட்டு குற்றச் செயல்கள் நடப்பதை தடுக்கப்படும், அனைத்து வீடுகளுக்கும் இலவசமாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்படும் எனவும் கு.சண்முகம் கூறியுள்ளார்.

இதுமட்டுமின்றி, தினம் ஒரு பகுதியில் புகார் தீர்க்க குறைதீர் முகாம் நடத்தப்படும், அனைத்து வீடுகளுக்கும் மாடித்தோட்டம் அமைக்க உதவிகள் செய்யப்படும், இலவச உடற்பயிற்சி கூடம் பூங்கா அமைத்து தரப்படும், மகளிர்களுக்கு சுய தொழில் பயிற்சி அளித்து தொழில் தொடங்க கடனுதவி பெற்று தரப்படும், 6 மாதத்திற்குள் சரி செய்யப்படாமல் உள்ள மழைநீர் வடிகால், சாலைகள், கழிவுநீர், கால்வாய், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட அத்யாவசிய தேவைகளையும் நிறைவேற்றுவதாக சண்முகம் கூறியுள்ளார்.

இந்த தமிழ்நாடு இளைஞர் கட்சி வாக்குறுதிகளை மட்டும் தரும் கட்சி இல்லை. இந்த கட்சி ஆட்சிக்கு வராமல் பல்வேறு நன்மைகளை தொகுதி மக்களுக்கு செய்துள்ளன. உதாரணமாக ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு கடந்த நான்கு ஆண்டுகளில்,

9 தெருக்களுக்கு மழைநீர் வடிக்கால் அமைக்கவும், மதுரவாயல் தொகுதியில் 80க்கும் மேற்பட்ட பழுதடைந்த மின்கம்பங்கள் மாற்றவும், ஆலப்பாக்கம் ஸ்ரீ தேவிக்குப்பம் இராதா அவென்யூ சாலை அமைக்கவும், கர்ப்பிணி பெண்கள் அமரும் பழுந்தடைந்த இருக்கைகள் சரி செய்யவும் தமிழ்நாடு இளைஞர் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

பதவிக்கு வருவதற்கு முன்னதாகவே மக்கள் நலப்பணி செய்து பலருக்கு உதவி வரும் தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் போட்டியிடும் சண்முகத்திற்கு வாக்களித்தால் மதுரவாயல் தொகுதி வளம்பெறும். ஏனெனில் இவர்கள் தன்னலமற்றவர்கள். ஊழலற்ற ஒருவரை தலைமையாக கொண்டவர்கள் என்பதே அவர்களின் அடையாளமாகும்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

100 நாட்கள் ஓடிய படங்களின் பட்டியலில் இணையும் மாஸ்டர்!

Next Post

கணவர் ஜூம் மீட்டிங்கில் பேசி கொண்டிருந்தபோது நிர்வாணமாக வந்து நின்ற மனைவியால் பரபரப்பு…!!

Next Post

கணவர் ஜூம் மீட்டிங்கில் பேசி கொண்டிருந்தபோது நிர்வாணமாக வந்து நின்ற மனைவியால் பரபரப்பு...!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025

புதிய உதயம்; திராவிட வெற்றிக் கழகம்!

November 20, 2025

தூய்மைப்பணியாளர்களுக்கு ஆதரவாக திலகபாமா!

November 20, 2025

மீண்டும் பரப்புரையைத் தொடங்கும் விஜய்!

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version