நடப்பாண்டின் முதல் 6 மாதங்களில் 300 கோடி போலி கணக்குகளை முடக்கியுள்ளதாக பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
ஆர்ட்டிஃபிஷியல் இன்ட்டலிஜன்ஸ் தொழில்நுட்பம் மூலம் இது சாத்தியமாகியுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் விளக்கம் அளித்திருக்கிறது.
பயனாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக 5 ஆண்டுகளில் 1,300 கோடி டாலர்களை செலவளித்துள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பயனாளர்களின் பாதுகாப்பிற்காக மட்டும் 40 ஆயிரம் பேர் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும் ஃபேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.