Vi எனப்படும் வோடோபோன் ஐடியா நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வரும் சேவையை, 3ஜியிலிருந்து 4ஜிக்கு மாற்ற முடிவு செய்துள்ளது.

இந்திய தொலைதொடர்பு சந்தையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வருகையால், மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களான வோடாபோன், ஏர்டெல், ஐடியா போன்ற நிறுவனங்கள் கடும் பின்னடைவை சந்தித்தன. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களை இழக்க தொடங்கினர்.
ஜியோ நிறுவனத்தின் கடும் போட்டியை எதிர்கொள்ள முடியாமல், ஐடியா நிறுவனம் வோடோபோனுடன் கடந்த 2018 ல் இணைந்தது. அதைதொடர்ந்து, கடந்த மாதம் இரண்டு நிறுவனங்களும் ‛Vi’ என்ற ஒரே பிராண்டை அறிவித்தன.

இந்நிலையில், போட்டி நிறுவனங்களை சமாளிக்கும் விதமாகவும், வாடிக்கையாளர்களுக்கு கவரும் வகையிலும் அதிவேக டேட்டா சேவையை வழங்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனால் 3ஜி சேவையிலிருந்து 4ஜி சேவைக்கு மாற்ற அந்நிறுவனம் முடிவு எடுத்துள்ளது. இத்திட்டத்தை பல்வேறு கட்டங்களாக நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ள நிலையில், 900 MHz, 1800 MHz, 2100 MHz போன்ற அலைக்கற்றைகளை 4ஜி சேவைக்கு மாற்ற முடிவு எடுககப்பட்டுள்ளது.
அதே நேரம் 2ஜி சேவை மூலம் வாடிக்கையாளர்களுக்கு குரல் அழைப்பு சேவை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சேவை 100 கோடி இந்தியர்களுக்கு வழங்கப்படும் என Vi நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரவீந்தர் தாக்கர் தெரிவித்துள்ளார்.