பிரைவசி பாலிசி விவகாரத்தில் மத்திய அரசுக்கு வாட்ஸப் நிறுவனம் பதிலளித்துள்ளது.
கடந்த சில வாரங்களாகவே வாட்ஸப்பின் பிரைவசி பாலிசி பயனாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து பலரும் வாட்ஸப்பை விடுத்து டெலிகிராம், சிக்னல் என மாற்று செயலிகளின் பக்கம் வர தொடங்கியுள்ளது அதிகரித்துள்ளது. இதனை அடுத்து வாட்ஸப்பின் இந்த புதிய பிரைவசி பாலிசியை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வாட்ஸப்பின் தலைமை செயலகத்துக்கு கடிதம் எழுதியிருந்தது.
READ MORE- அமேசான் சலுகையில் அசத்தல் விலையில் ஸ்மார்ட்ஃபோன்கள்!
இதன்படி வாட்ஸப் நிறுவனம் மத்திய அரசின் கோரிக்கைக்கு பதில் அளித்துள்ளது.
அதில் தெரிவித்துள்ளதாவது, ‘ஃபேஸ்புக்குடன் தரவுகளை பகிர்வது தொடர்பாக எந்த ஒரு உறுதியும் நாங்கள் தரவில்லை. எங்கள் நோக்கம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்குவதுதான். தவறான தகவல் பரவுவதை சரி செய்யவும், எந்த கேள்விக்கும் பதில் அளிக்கவும் எப்போதும் தயாராகவே உள்ளோம்’ என பதிலளித்துள்ளது.