யாழ்பாணம் சிறையில் உள்ள 23 தமிழக மீனவர்கள் வரும் 11ம் தேதி விடுதலை செய்யப்படுவார்கள் என முன்னாள் முதலமைச்சரும், பிரதமரின் இணை செயலாளருமான செந்தில் தொண்டமான் தகவல் வெளியிட்டுள்ளார்.
யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 23 தமிழக மீனவர்கள் வரும் 11ம் தேதி விடுதலை செய்யப்படுவார்கள் என முன்னாள் முதலமைச்சரும், பிரதமரின் இணை செயலாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 23 தமிழக மீனவர்கள் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த 23 மீனவர்களும் கடந்த 28 ஆம் தேதி பருத்தித்துறை நீதிமன்றத்தில் Zoom செயலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் யாழ்ப்பாணம் சிறையில் உள்ள தமிழக மீனவர்களை செந்தில் தொண்டமான் சந்தித்து நலம் விசாரித்தார்.
அவர்களுக்கான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்ற அவர், மீனவர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த தமிழக மீனவர்களுக்கு புத்தாடை மற்றும் அத்தியாவசியப் பொருட்களை செந்தில் தொண்டமான் வழங்கியது குறிப்பிடத்தக்கது.