இந்தோனேசியாவில் செமெரு எரிமலை வெடிக்க தொடங்கி சாம்பல் புகையை உமிழ்ந்து வருவதால் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜகார்த்தா :
இந்தோனேசியா நாட்டில் புவித்தட்டுகள் தொடர்ந்து வருவதால் அடிக்கடி அங்கு நிலநடுக்கங்கள் சுனாமி மற்றும் எரிமலை வெடிப்புகள் ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே, அதிக மக்கள் தொகையை கொண்ட கிழக்கு ஜாவா மாகாணத்தில் செமெரு எரிமலை வெடிக்க தொடங்கியுள்ளது.
6 கிலோ மீட்டர் உயரத்துக்கு சாம்பல் புகையை உமிழ்ந்து வருவதால் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. மேலும், சாம்பல் துகள்கள் காற்றில் கலந்து வருவதால் மக்கள் சுவாசிக்கவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். கிராமங்களில் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை.
இதேபோல், கடந்த வெள்ளிக்கிழமை இந்தோனேசியாவின் சுலவேசி மாகாணத்தில் ரிக்டர் அளவுகோலில் 6.2 புள்ளிகள் அளவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதில் 56 உயிரிழந்தனர் மற்றும் 826 படுகாயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.