சீனாவில் கடந்த வருடம் பரவிய கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் மிக அதிகமாக உள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இதுவரை ஒன்றரை கோடிக்கும் அதிகமானோர் இந்த கொடிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.அமெரிக்காவை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் உள்ள பிரேசில் நாட்டில் கொரோனாவின் தாக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், பிரேசில் நாட்டில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25 லட்சத்தைக் கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி அங்கு கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 90 ஆயிரத்தைத் தாண்டியது. மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 17 லட்சத்தைத் தாண்டியுள்ளது.