மர்மமான முறையில் நான் இறந்துவிட்டால், அதுதொடர்பான காரணங்கள் உங்களுக்கு தெரியவந்தால் மகிழ்ச்சி அடைவேன் என்று எலான் மஸ்க் சூசமாக பதிவிட்ட ட்வீட் பரபரப்பை கிளப்பியுள்ளது.
உலக பண்க்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், சமீபத்தில் 44 பில்லியன் டாலர் கொடுத்து ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார். அதை தொடர்ந்து அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையும் உலகளவில் கவனமீர்த்து வருகிறது.
இந்நிலையில் எதிர்பாராத வகையில் நான் மர்மமான முறையி உயிரிழந்துவிட்டால், அதற்கான காரணம் உங்களுக்கு தெரியவருமாயின் நான் மகிழ்ச்சி அடைவேன் என்று குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
எலான் மஸ்க் இப்படியொரு ட்வீட்டை பதிவிட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. உக்ரைன் படைகளுக்கு ராணுவ தொலைதொடர்பு கருவிகளை சமீபத்தில் வழங்கினால் எலான் மஸ்க். அதனால் அவர் ரஷ்யாவின் கோபத்துக்கு அளாகியுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்காரணமாக ரஷ்ய படைகள் அவருக்கு மிரட்டல் விடுத்திருக்கும். அதனால் எலான் மஸ்க் இவ்வாறு கூறுகிறார் என்று யூகிக்கப்படுகிறது. எனினும் எலான் மஸ்க் உயிர் பயம் குறித்து பதிவிட்டுள்ள இந்த ட்வீட் சமூகவலைதளத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.