இங்கிலாந்து இளவரசி டயானாவின் கார் ₹6.10 கோடிக்கு ஏலம் போனது.


உலகப்புகழ்பெற்ற இங்கிலாந்து இளவரசி டயானா 1981ல் இளவரசர் சார்லஸை மணந்தார். 1996ம் ஆண்டு சார்லஸுடன் விவாகரத்து ஏற்பட்டது. அதை தொடர்ந்து 1997ம் ஆண்டு ஆகஸ்டு 31ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கார் விபத்தில் பலியானார். அப்போது அவருக்கு வயது 36. அவரது 25வது நினைவுதினம் விரைவில் கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில், இளவரசி டயானா 1985 முதல் 1988 வரை பயன்படுத்திய போர்டு எஸ்கார்ட் வகையைச் சேர்ந்த கார் ஒன்று நேற்று முன்தினம் இங்கிலாந்தில் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில், இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஏராளமான செல்வந்தர்கள் கலந்து கொண்டனர்.


ஏலத்தின் ஆரம்ப விலை 1 லட்சம் பவுண்டுகள்.அதாவது,இந்திய மதிப்பில் சுமார் ₹93 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டது. பலத்த போட்டிகளுக்கு இடையே 6.50லட்சம் பவுண்டுகளுக்கு கார் ஏலம் போனது. இது இந்திய மதிப்பில் ₹6.10 கோடி ஆகும். இந்த காரை இங்கிலாந்தை சேர்ந்த ஒரு நபர் ஏலத்தில் எடுத்தார்.




