இத்தாலியில் உள்ள சலேமி பகுதியில் உள்ள வீடுகளை வெறும் 87 ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சொந்தவீடு என்பது அனைவரின் ஒவ்வோரு மனிதனின் அடிப்படை கனவாக உள்ளது. என்பதை மறுக்கமுடியாது. இதற்காகவே பெரும்பாலானோர் வாழ்நாள் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கின்றனர். அப்படி இருக்க, இத்தாலியில் ஒரு வீடு வெறும் ஒரு யூரோ அதாவது தற்போதைய இந்திய மதிப்பில் ரூ..87 எனும் விலைக்கு விற்கப்படுவது பலரது புருவங்களை உயர்த்த செய்துள்ளது.
அதேசமயம், இவ்வளவு குறைந்த விலைக்கு வீடுகளை விற்றாலும் கூட அதை யாரும் வாங்க முன்வரவில்லை என்பது தான் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
அந்நாட்டின் தென்மேற்கில் உள்ள சிசிலி நகரத்தின் சலேமி பகுதியில் தான் இந்த அளவிற்கு குறைந்த விலையில் வீடு ஏலம் விடப்படுகிறது. 1968ம் ஆண்டு பெலிஸ் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட பூகம்பத்திற்கு பிறகு, சலேமி நகரத்தின் பெரும்பாலான மக்கள் அங்கிருந்து வெளியேறியதால் அந்நகரத்தில் மக்கள் கூட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாகவே, முன்பு போலவே நகரங்களில் மீண்டும் மக்கள் அதிக அளவில் குடியேற வேண்டும் என்ற நோக்கில், குறைந்த செலவில் வீடுகள் வழங்கப்படுகின்றன என அந்த நகரத்தின் மேயர் அறிவித்துள்ளார்.




