சென்னை அணியின் அடுத்தடுத்த வெற்றிகளால் மற்ற அணிகளின் பிளே ஆப் சுற்று கேள்விக்குறியாக உள்ளது.
துபாய்:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐ.பி.எல் தொடரில் தொடர் தோல்வி காரணமாக ஏற்கனவே பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறியது.சென்னை அணி கடந்த 2008 முதல் 2019 வரை விளையாடிய அனைத்து ஐ.பி.எல் தொடர்களிலும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற ஒரே அணியாக திகழ்ந்தது.இந்த நிலையில் இந்த ஆண்டு மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டிக்கு பிறகு சென்னை அணி பெரிதாக ஜொலிக்கவில்லை.அதனால் பிளே ஆப் சுற்றையும் இழந்தது.இந்தநிலையில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணி எது என்ற போட்டியில் மும்பை அணி 8 வெற்றிகளுடன் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது.மற்ற 3 அணிகள் தான் எது என்ற குழப்பம் தொடர்ந்து நீடிக்கிறது.
அந்த வரிசையில் பெங்களூர்,கொல்கத்தா,பஞ்சாப்,டெல்லி,ஹைதராபாத் அணிகள் இடையே கடும் போட்டிகள் நிலவி வரும் நிலையில் இன்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி தோல்வியை சந்தித்தால் சென்னை அணிக்கு அடுத்து பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறிய அணியாக ராஜஸ்தான் அணி இடம் பெரும்.
கடந்த பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி அசத்தல் வெற்றி பெற்றது.இந்த போட்டியில் ஒரு வேளை பெங்களூர் அணி வெற்றி பெற்று இருந்தால் பிளே ஆப் அணிக்கு தகுதி பெற்ற முதல் அணியாக திகழ்ந்து இருக்கும்.பெங்களூர் அணி மும்பை அணிக்கு எதிரான போட்டியிலும் தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.இதே போல் சென்னை அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணி அதிர்ச்சி தோல்வி அடைந்ததால் கொல்கத்தா அணிக்கும் பிளே ஆப் சுற்று தகுதி கேள்விக்குறியாகவே இருக்கிறது.இத்தனை அணிகளுக்கும் போட்டா-போட்டி நடத்த முக்கிய காரணம் மற்றும் தடையாய் சென்னை அணியின் அடுத்தடுத்த திடீர் வெற்றிகளே காரணம்.(நானே பிளே ஆப் போகல..எவன் பிளே ஆப் போனா எனக்கு என்ன போகலேன்னா எனக்கு என்ன..சென்னை அணியின் மைண்ட் வாய்ஸ்)