கொடிய கொரோனா வைரஸ் பேயாட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது ஆனால் அதற்குள், மற்றோரு வைரஸ் சீனாவில் வேகமாக பரவி வருவதாக செய்திகள் வருகின்றன.
சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவிய COVID19 வைரஸ், உலகையே ஆட்டம் காண வைத்துள்ளது. இந்நிலையில், சைனாவில்ஜியாங்சுவின் தலைநகரான நாஞ்சிங்கைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கு காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டன.
தொற்று பாதிப்பு ஏற்பட்டவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது உடலின் உள்ளே லுகோசைட் அதாவது ரத்தில் உள்ள வெள்ளை அணுக்கள், மற்றும் ரத்தத்தில் உள்ள பிளேட்லெட் எண்ணிக்கை குறந்துள்ளதை பரிசோதனையில் கண்டுபிடித்தனர்
அதன்பின் 25 நாட்கள்சிகிச்சைக்குப் பிறகு, அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இதற்கு காரணம்
Tick-borne virus புதிய வகையான வைரஸ் ஆகும்
தற்போது Tick-borne virus எனப்படும் ஒரு புதிய தொற்று நோயினால், சீனாவில் ஏழு பேர் இறந்து விட்டார்கள் எனவும். இதுவரை 60 பேருக்கு இந்த புதியதொற்று பரவியுள்ளது என சீனாவில் உள்ள அதிகாரப்பூர்வ ஊடகங்கள் நேற்றுபுதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.
இதுவும் கொரோனவைரஸ் போல் மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவுவதற்கான சாத்தியக்கூறு அதிகம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் Severe Fever with Thrombocytopenia Syndrome Bunyavirus அல்லது SFTSV என அடையாளம் காணப்பட்டுள்ளது. அதாவது இந்த வைரஸால் தாக்கப்பட்டால் கடுமையான காய்ச்சலுடன், ரத்தத்தின் வெள்ளை அணுக்கள் மற்றும் உயிரணுக்கள் குறையும் நிலை உருவாகும்
சைனா இது புதிய வைரஸ் அல்ல. 2011 ஆம் ஆண்டிலேயே இந்த வகையான வைரஸின் நோய்க்கிருமியை கண்டறிந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளது
மருத்துவவல்லுநர்கள் இந்த நோய்த்தொற்று மனிதர்களுக்கு உண்ணி பூச்சி மூலம் பரவி இருக்கலாம் மேலும் இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது
இந்த புதிய வைரஸ் பாதிப்பு உள்ள நோயாளிகளின் இரத்தம் அல்லது சளி மூலமாக மற்றவர்களுக்கு இந்த வைரஸ் பரவும் என மருத்துவகுழு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.