சீனாவில், சரக்கு கப்பலுடன், பெட்ரோல் டேங்கர் கப்பல்மோதி தீப்பிடித்தவிபத்தில், 14 மாலுமிகளை மாயம். மீட்பு படையினர் தீயை அணைக்கப் போராடி வருகின்றனர்.
சீனாவில் சுமார் 3000 டன் பெட்ரோல் ஏற்றிச் சென்ற டேங்கர் கப்பல், மணல் மற்றும் ஜல்லி ஏற்றி வந்த சரக்கு கப்பலுடன், நேற்று அதிகாலை மோதி தீப்பிடித்தது. இதுகுறித்து, தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றொரு கப்பலில் விரைந்து சென்று தீயை அணைக்க போராடினர்.
தீப்பிடித்த கப்பலில் மொத்தம் 17 பேர் பயணம் செய்துள்ளனர். மீட்புக் குழுவினர் இதுவரை மூன்று மாலுமிகளைக் காப்பாற்றியுள்ளனர், மற்ற 14 மாலுமிகளின் நிலை என்னவென்று தெரியவில்லை, என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மாயமான 14 மாலுமிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தக் கோடையில், ஷாங்காயில் உள்ள யாங்சே நதியில் கப்பல்களுக்கு இடையே ஏற்பட்ட முதல் மோதல் இது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.