நியூ யார்க் நகரத்தைச் சேர்ந்த ஜோசப் ஜேம்ஸ் டி ஏஞ்சலோ (74), காலிஃபோர்னியாவாவில் கொலை, கொள்ளை, பலாத்காரம் முதலிய பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்தார். காவல் துறை அதிகாரியாகப் பணிபுரிந்த இவர், அமெரிக்க கடற்படையில் சேர்ந்து வியட்நாம் போரில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரவு நேரங்களில் வீட்டுக்குள் சென்று ஆண்களை சமையல் அறையில் கட்டி வைத்து, பெண்களைத் துன்புறுத்துதல் போன்ற கொடூர காரியங்களில் செயல்பட்டு வந்தார்.காவல் துறையில் இருந்துகொண்டே குற்றச்செயல்கள் புரிந்த இவரைப் போலீசார் வெகு நாட்களாகத் தேடி வந்தனர். ஒரு முறை கடை ஒன்றில் கொள்ளையடிக்க முயன்ற பொது மாட்டிக்கொண்டதால், இவரது போலீஸ் வேலை பறிபோனது. அதன் பிறகு, மோட்டார் வாகன முறையாளராக (mechanic ) பணியாற்றி, தனது துற்செயல்களைச் தொடர்ந்தார்.
இறுதியாக 2018ஆம் ஆண்டு குற்றம் நடந்த இடத்தில் கிடைத்த மரபணுவை, வலைத்தளங்கள் மூலம் பரிசோதனை செய்து இவரைப் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர். இது குறித்து பேசும்போது, “கொடுமையின் மறுபெயர் ஜோசப் டி ஏஞ்சலோ. இவரை அடையாளம் காண்பதில் தாமதம் ஏற்பட்டது. விசாரணையில் இவர் 13 கொலைகள், 50 பலாத்காரம் மற்றும் 120 கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டிருந்ததாக தெரியவருகிறது. நீதி மன்றத்தில் ஒப்படைத்தபோது தனது குற்றங்களுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.” என்று போலீசார் தெரிவித்தனர். இது குறித்த விசாரணை மேலும் தொடர்கிறது என்றும் கூறினார்கள்.