நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் 2 இந்திய தொழிலாளர்களை பயங்கரவாதிகள் கடத்தி சென்றுள்ளனர்.
இபாடா:
இந்தியாவில் இருந்து நைஜீரியா நாட்டிற்கு ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் மருந்துத் துறையில் வேலை பார்ப்பதற்காக சென்று வருகின்றனர்.இந்த நிலையில் நைஜீரியா தலைநகரான இபாடானில் 2 இந்திய தொழிலாளர்கள் நேற்று இரவு வேலை முடிந்து திரும்பிக்கொண்டு இருந்தனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக துப்பாக்கியுடன் வாகனங்களில் வந்த பயங்கரவாதிகள் இரண்டு இந்திய தொழிலாளர்களையும் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றுள்ளனர்.
Read more – விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று உண்ணாவிரதம்
இது குறித்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஒலுக்பெங்கா படேய் பேசியபோது,இந்திய தொழிலாளர்களை கண்டுபிடிக்க தனிப்படை ஒன்று அமைத்து தேடிவருகிறோம்.ஏற்கனவே அனைத்து வெளிநாட்டவர்களும் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது.மேலும் தங்கள் பகுதிகளை சுற்றி ஏதேனும் சந்தேகத்திற்குரிய ஆள் நடமாட்டம் இருந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளார்.