தன்னை ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்த காதலனை ஆப்பிள் ஏர்டேக்கை பயன்படுத்தி, காதலி கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த கெய்லின் மோரிஸ் (26), ஆண்ட்ரே ஸ்மித் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார். திடீரென்று காதலன் கெய்லினை விட்டு பிரிந்துவிட்டார். இது கெய்லினுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து காதலனின் முடிவுக்கான காரணத்தை கண்டறிய அவர் முயன்றார்.
அதற்காக ஆப்பிள் ஏர்டேகை பயன்படுத்தி காதலன் செல்லும் இடங்களை கண்டறிந்தார். காதலன் ஆண்ட்ரே 24 மணிநேரமும் எங்கு செல்கிறார் என்பதை அவர் தொடர்ந்து கண்காணித்து வந்தார். அப்போது ஒரு மதுபான விடுதிக்கு காதலன் அடிக்கடி செல்வது கெய்லினுக்கு தெரியவந்துள்ளது.
உடனடியாக அவர் அங்கு சென்று பார்த்தபோது, வேறொரு பெண்ணுடன் காதலன் ஆண்ட்ரே மிகவும் நெருக்கமாக அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். காதலனுடன் சண்டையிட்டுவிட்டு வெளியே வந்தபோது, கெய்லின் தனது காரை வேகமாக எடுத்து ஆண்ட்ரே மீது பலமாக மோதினார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆண்ட்ரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து கெய்லினை போலீசார் கைது செய்தனர். ஆப்பிள் ஏர்டேக்கை பயன்படுத்தி தனிநபர் ஒருவருடைய தனிப்பட்ட நகர்வுகளை கண்காணிக்க முடியும் என்று பிரச்னை சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து பிப்ரவரி மாதம் தெரியாத ஏர்டேக் ஒருவருடன் பயணித்தால், ஆப்பிள் பயனர்கள் எச்சரிக்கப்படும் வகையில் புது வசதியை ஆப்பிள் அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.