நடப்பு ஐபிஎல் போட்டியில் 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை டேவிட் வார்னர் படைத்துள்ளார்.
ஐபில்-2020 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது.
யாருமே எதிர்ப்பாக்காத புதிய திருப்பங்களுடன் இந்தத் தொடர் உள்ளதால் ரசிகர்களின் எண்ணிக்கையும் இதைப்பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் 5 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பெற்றுள்ளார்.
நேற்று நடைபெற்ற 35 ஆவது கிரிக்கெட் ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான ஐதராபாத் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின.,
இதில் பந்து வீச்சைச் தேர்வு செய்தார் வார்னர். முதலில் பேட் செய்த கொல்கத்தா 164 ரன்கள் எடுத்தது. இதையடுத்து விளையாடிய ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. இதில் வார்னர் 467 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அப்போது டேவிட் வார்னர் (135 போட்டிகளில் ) இந்த ஐபிஎல் போட்டியில் 5 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இவருக்கு முன் கோலி(5759). ரெய்னா(5368), சர்மா(5149), ஆகியோர் முதல்மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர்.
ஐபிஎல் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல்வெளிநாட்டு வீரர் அவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் வார்னர்.