இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் உத்திரபிரதேசம் ஆகும் இந்த மாநிலத்தில் இதுவரை 53 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்க பட்டுள்ளனர். 1200 க்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்க பட்டவர்கள்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க படுகிறது அப்படி ஒரு மருத்துவ மனையில் மழை பெய்யும் போது மேல் கூரை சரியாக இல்லாததால் தண்ணீர் அருவி போல் ஒழுகியது.
இந்த விடீயோவை அம்மாநில முன்னாள் முதல் அமைச்சர் அகிலேஷ் யாதவ் தன் ட்விட்டர் பக்கத்தில் போட்டு இது தான் “யோகி ஆதித்யநாத்”ஆட்சியில் நடக்கும் நிர்வாக சீர்கேடு என்று பதிவிட்டுள்ளார் அந்த வீடியோ ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. சமீபத்தில் நரேந்திர மோடி கொரோனா ஒழிப்பில் உத்திர பிரதேசம் இந்தியாவுக்கு முன்னோடியாக உள்ளது என பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.