இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் படம் நடிப்பது குறித்து தர்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யாவின் 39வது படமாக ஹரி இயக்கத்தில் ‘அருவா’ படம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. படத்திற்கு இசையமைப்பாளராக இமான் இருக்கு ஸ்டியோ கிரீன் தயாரிக்கும் என சொல்லப்பட்டது.
READ MORE- #Thalapathy65 விஜய்- முருகதாஸ் கூட்டணி உடைய யார் காரணம்?
இந்த நிலையில் கொரோனா காலம் என்பதால், தனது சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீதத்தினை இந்த படத்திற்காக குறைத்து கொள்வதாகவும் இயக்குநர் ஹரி அறிவித்து இருந்தார். ஆனால், அதற்கு பிறகு சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ படத்திற்கு ஓடிடி ரிலீஸ் பிரச்சனை இருந்தது. ஓடிடி ரிலீஸ் வேண்டாம் என ஹரியும் கோரிக்கை வைத்திருந்தார்.

ஆனால், அது ஓடிடியில்தான் வெளியாயிற்று. இதனால், ஹரி தரப்பிற்கும் சூர்யாவிற்கும் மனகசப்பு ஏற்பட்டதாகவும், ‘அருவா’ படம் கைவிடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் ஹரி தற்போது அருண் விஜய் வைத்து இயக்கும் படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் பிப்ரவரியில் தொடங்கி ஆகஸ்ட்டில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இன்னொரு பக்கம் அருண்விஜய்யின் மகன் அர்ணவ் சூர்யாவின் தயாரிப்பில் உருவாகும் குழந்தைகள் சினிமாவில் அறிமுகமாகிறார். அதற்கான தொடக்க பூஜை நேற்று நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.




