பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்டோர் நடித்து, கன்னடத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான “கே.ஜி.எஃப்” பிரம்மாண்டமான வசூல் சாதனை செய்தது. அதனைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி நாடு முழுவதும் வசூல் வேட்டை நடத்தியது கே.ஜி.எஃப் .
இதனை தொடர்ந்து ’கேஜிஎஃப் 2’ படத்தின் ஷூட்டிங்கை அறிவித்து தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பிலும் ஈடுபட்டு வருகிறது படக்குழு. ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ்,ரவீனா தண்டன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லன் அதிராவாக நடித்திருக்கிறார். முதல் பாகத்திலும் அதிரா இருந்தபோதிலும் அவரின் முகத்தை காண்பிக்கவில்லை. இந்நிலையில் தான் சஞ்சய் தத்தை கொடூர வில்லனாக நடிக்க வைத்திருக்கிறார்கள்.தன் கெரியரில் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்தது இல்லை என்கிறார் சஞ்சய் தத். யஷை விட சஞ்சய் தத் தான் கே.ஜி.எஃப். 2 படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார்.
கடந்த 8 ஆம் தேதி யாஷ் பிறந்தநாளுக்கு முதல்நாள் இரவு படத்தின் டீசரை வெளியிட்டது படக்குழு. ஒரே நாளில் மில்லியன் லைக்ஸ், பல கோடி வியூஸ்களை தாண்டிய இந்தியாவின் முதல் படம் என்ற பெருமையையும் பெற்றது, இதனை கண்ட யாஷ் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி வரவேற்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில் கே.ஜி.எஃப். 2 படம் ஜூலை மாதம் 16ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். கே.ஜி.எஃப். 2 கன்னடம் தவிர்த்து தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகவிருக்கிறது.இத்திரைப்படத்தை காண அனைத்து மொழி ரசிகர்களும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் யஷ் ரசிகர்கள் பிரதமர் மோடிக்கு உருக்கமுடன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அந்த கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த கடிதத்தில் ரசிகர்கள் கூறியிருப்பதாவது
“கேஜிஎஃப் 2 ஜூலை 16 வெள்ளிக்கிழமை வெளியாகிறது. இத்திரைப்படத்தை காண மக்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.எனவே, படம் வெளியாகும் அன்று தேசிய விடுமுறை அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். எங்கள் உணர்வுகளை புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். இது படம் அல்ல. எங்கள் உணர்வு” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர் ரசிகர்கள்.
வழக்கமாக பெரிய ஹீரோக்களின் படங்கள் ரிலீஸாகிறது என்றால் அன்றைய தினம் லீவு கேட்டு யாராவது தன் மேனேஜருக்கு எழுதும் கடிதம் தான் வெளியாகும். ஆனால் யஷ் ரசிகர்களோ ஒருபடி மேலே போய் தேசிய விடுமுறை கேட்டு மோடிக்கே கடிதம் எழுதியிருக்கிறார்கள்