தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் ராணாவிடம் இன்று அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 2017 ஆம் ஆண்டு நடைப்பெற்ற போதைப் பொருள் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தபட்டு வரும் நிலையில் இன்று நடிகர் ராணாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் பிரபல இயக்குனர் ஜெகன்நாத் மற்றும் நடிகை ரகுல் பிரீத் சிங் அகியோரிடம் சில நாட்களுக்கு முன்பு விசாரணை நடந்தது.




