தடையை மீறி போராட்டம் நடத்தியதாக நடிகை குஷ்பு மீது வழக்கு.
நடிகை குஷ்பு தடையை மீறி சத்தியாகிரக அறவழிப் போராட்டத்தை நடத்தியதற்காக அவர் உள்ளிட்ட 150 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராசில் ஒரு இளம் பெண்ணை சிலர் கூட்டுப் பலாத்காரம் செய்து கொலை செய்தனர். இதையடுத்து போலீஸார் இளம்பெண்ணின் உடலை எரித்தனர்.
இதைக்கண்டித்து நாட்டிலுள்ள காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து கண்டித்தனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியினர் நேற்று முன் தினம் பெரம்பூர் ரயில்நிலையம் எதிரே போராட்டம் நடத்தினர். இதில் காங்கிரஸ் கட்சியின்
வடசென்னை மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில் நடைபெற்ற சத்தியாகிரக அறவழி அமர்வு போராட்டத்தில் அக்கட்சியில் செய்தித்தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு உள்ளிட்ட சுமார் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தடையை மீறி இப்போராட்டத்தை நடத்தியதாக குஷ்பு உள்ளிட்டோர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.