இலவச சினிமா பயிற்சி வகுப்பை இயக்குநர் வெற்றிமாறன் தொடங்கியுள்ளார்.

நலிந்த முதல் தலைமுறை பட்டதாரிகளை கண்டறிந்து அவர்களுக்கு உணவு இருப்பிடத்துடன் ஓராண்டு இலவச சினிமா பயிற்சி அளிக்க முடிவு செய்திருப்பதாக இயக்குநர் வெற்றிமாறன் கூறினார்.
சமீப கால படங்களில் ஜாதி தொடர்பான பேச்சுகள் அதிகமாக உள்ளதே என வெற்றிமாறனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் எல்லோருக்கும் எல்லா வகையான கதைகளையும் சொல்ல உரிமை உண்டு. ஆனால் இயக்குநர்கள் சமூக பொறுப்போடு செயல்பட வேண்டும் என்று பேசினார்.
சினிமா பயிற்சி வகுப்பிற்கு பேராசிரியர் ராஜநாயகம் தலைமை ஏற்கிறார். சினிமாவுடன் சமூக அறிவியல், ஆங்கிலம், தமிழ், கலாசாரம், இலக்கியம் ஆகியவை இந்த பயிற்சி வகுப்புகளில் பயிற்றுவிக்கப்படும். ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள், தமிழில் எழுத படிக்கத் தெரிந்தவ, சமூக பொருளாதார ரீதியாக நலிந்த முதல்தலைமுறை பட்டாதாரிகள் விண்ணப்பம் செய்யலாம் என்றும் மாவட்டத்துக்கு ஒரு மாணவர் என தமிழகம் முழுக்க 35முதல் 40 மாணவர்களுக்கு தேர்வு செய்யப்பட்டு இலவசமாக சினிமா பயிற்சி வழங்கப்படும் என அவர் பேசினார்.




