ஜெயம்ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக இருக்கிறது. இதில் ராஜராஜ சோழன் கதாபாத்திரத்தில் ஜெயம்ரவி நடித்துள்ளார். இது தவிர அஹமது இயக்கத்தில்’ஜன கன மன’ படத்திலும், அவரது இயக்கத்தில் மற்றொரு படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், ஜெயம்ரவியின் 30வது படத்திற்கான படபூஜை இன்று தொடங்கியது. பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்களை இயக்கிய ராஜேஷ் இப்படத்தை இயக்குகிறார். காமெடி கலந்த ரொமான்ஸ் கதையாக உருவாகவுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். வில்லனாக நட்டி என்கிற நட்ராஜ் நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் படத்திற்கு இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.