களவாணி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆகி பள்ளி மாணவியாக நடித்து ரசிகர் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகை ஓவியா.
அந்த படத்திற்க்கு பிறகு அவர் நடித்த மெரினா, மன்மதன் அம்பு மற்றும் சில படங்கள் வந்தாலும் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் குடிபுகுந்தார் நடிகை ஓவியா. அவருக்கு “ஓவியா ஆர்மி”என்று ஒரு தனி ரசிகர் கூட்டமே சமூக வலைதளத்தில் உருவானது, அந்த நிகழ்ச்சிக்குப் பின் தனது சமூக வலைதளங்களில் எப்பொழுதாவது ஒருசில “ட்வீட்” களை பதிவு செய்து வந்தார்.
ஒருசில விஷயங்களை நேரடியாகவும் ஒருசில விஷயங்களை மறைமுகமாகவும் அவர் பதிவு செய்யும் கருத்துக்களுக்கு பெரும் ஆதரவும் எதிர்ப்பும் கிடைத்து வருகிறது. குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்தும் அந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டுமா? என்பது குறித்தும் போட்டியாளர்களின் மன அழுத்தத்தை பிக்பாஸ் நிர்வாகிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது போன்ற கருத்துக்களை அவர் பதிவு செய்த டுவீட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று நாடு முழுவதும் 74 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ’சுதந்திரம்’ குறித்து அவர் தனது டுவிட்டரில் ’சுதந்திரம் என்பது கொடுக்கப்படுவது அல்ல, எடுக்கப்படுவது என்று சுபாஷ் சந்திரபோஸ் கூறியதை ட்வீட் செய்துள்ளார். ஓவியாவின் சுதந்திரம் குறித்த இந்த கருத்துக்கு ரசிகர்கள் பல்வேறு கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.இது சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.