நடிகர் சிம்புவிற்கு இனிமேல் சங்கத்தின் சார்பில் ஒத்துழைப்பு வழங்கமாட்டோம் என்று திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
சென்னை:
அன்பானவன் அடங்காதவன் அசராதவன் (AAA) திரைப்படத்தில் சூட்டிங் தளத்திற்கு அடிக்கடி வராமல் இருந்தும், படத்தை முழுமையாக நடித்து கொடுக்காமல் இருந்ததாலும் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு மிக பெரிய நஷ்டம் ஏற்பட்டது. அந்த நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் சிம்பு அடுத்ததாக நடிக்கும் 3 படத்தில் இருந்து தலா இரண்டரை கோடி ரூபாயை சங்கத்துக்கு வழங்கி ஏழரை கோடி சமன் செய்ய திட்டமிடப்பட்டது.
தற்போது ஈஸ்வரன் வெளியாக இருக்கும் நிலையில் அவருக்கு வழங்க வேண்டிய சம்பளத்திலிருந்து இரண்டரை கோடி ரூபாயை சங்கத்திற்கு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்ட நிலையில், தயாரிப்பாளரும் சிம்பு தரப்பில் வாதிட்டு வழங்கமுடியாது என்று தெரிவித்தனர். இதனால் சிம்பு நடித்த ஈஸ்வரன் படத்திற்கு தடை விதித்து OTT இணையத்தளங்களும் வாங்கவேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் கேட்டுக்கொண்டது.
Read more – இன்றைய ராசிபலன் 14.01.2021!!!
இந்நிலையில் நேற்று தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர கூட்டம் நடத்தப்பட்டு அதில், ஈஸ்வரன் படத்திற்கு விதித்த தடையை விலக்கிக் கொள்வது என்றும் இனிமேல் நடிகர் சிம்புவிற்கு தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து எந்தவிதமான ஒத்துழைப்பும் வழங்கப்படாது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து ஈஸ்வரன் திட்டமிட்டபடி இன்று திரைக்கு பொங்கல் பரிசாக வெளிவருகிறது.