ஆந்திராவில் பாசத்திற்காக ஏங்கி, பிறந்து 11 மாதமே ஆன தங்கையை 5 வயது சிறுமி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோர் தங்களது முதல் குழந்தைக்கு கொடுக்கும் பாசம் என்பது அளவில்லா எல்லையை கொண்டது. அதேசமயம், இரண்டாவது குழந்தை ஏற்பட்டவுடன், பெற்றோர் தங்களது முழு கவனத்தையம் அந்த குழந்தையிடம் செலுத்த தொடங்கி விடுகின்றனர்.
ஆனால், அந்த மாற்றம் முதல் குழந்தைகளின் மனதில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பல பெற்றோர் புரிந்துகொள்வதே இல்லை என்பதே உண்மை. அத்தகைய செயலால் தான், ஆந்திராவில் 5 வயது சிறுமி கைக் குழந்தையை கொன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.
ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள துர்கஷானம் கிராமத்தை சேர்ந்தவர் காவியா. அவருக்கு பிறந்த முதல் குழந்தை நிர்மலாவிற்கு 5 வயதான நிலையில், அதிகம் செல்லம் கொடுத்து மிகுந்த பாசத்துடன் வளர்த்து வந்துள்ளனர். இதனிடையே, காவியவிற்கு 11 மாதங்கள் முன்பாக பிறந்த ஹேமாஸ்ரீ என்ற கைக் குழந்தையும் இருந்துள்ளது. இரண்டாவது குழந்தை பிறந்தது முதல் பெற்றோர்கள் நிர்மலாவை சரியாக கவனிக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு வீட்டில் படுக்க வைத்திருந்த குந்தை ஹேமாஸ்ரீயைக் காணாமல் பெற்றோர் தேட தொடங்கிய நிலையில், வீட்டின் மாடியில் இருக்கும் தண்ணீர் தொட்டியிலிருந்து குழந்தையை பிணமாக மீட்டுள்ளனர்.
இதுகுறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்த பொழுது, 5 வயது குழந்தையான நிர்மலாவிடம் போலீசார் கேட்டுள்ளனர்.
அப்போது தங்கை பிறந்தது முதலே அவள் மீது பெற்றோர்கள் அதிக பாசத்துடன் இருந்தனர், ஆனால் என் மீது அவர்களது பாசம் குறைந்துவிட்டது. இதனால் என் தங்கையை தண்ணீர் தொட்டியில் போட்டுவிட்டதாக கூறியதால் பெற்றோர்கள் மற்றும் போலீசார் உட்பட அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தற்போது என்னசெய்வது என்று தெரியாமல் கொலை வழக்கு பதிவு செய்திருக்கும் போலீசார் 5 வயது குழந்தையை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெற்றோரின் சிறு மாற்றமும் மழலைகளின் மனதில் எத்தகைய மாற்றம் ஏற்படுத்தும் என்பதற்கு, இந்த செயல் ஒரு மோசமான முன்மாதிரியாக அமைந்துள்ளது.




