மெட்ரோ ரயில், பொது நிகழ்ச்சிகள் போன்றவற்றிற்கான அனுமதியுடன், ஊரடங்கின் 4ம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில், மத்திய அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி, செப்டம்பர் 30 வரையிலான 4ம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதன் விவரங்கள் பின்வருமாறு:
- செப்டம்பர் 7ம் தேதி முதல் முன்னெச்சரிக்கைகளுடன் மெட்ரோ ரயில்கள் இயங்கலாம்
- செப்டம்பர் 21ம் தேதி முதல் அரசியல், விளையாட்டு, பொது மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தவும், அதிகபட்சமாக 100 பேர் வரை கலந்துகொள்ளவும் அனுமதி
- மாநிலத்திற்குள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கு எந்த தடையும் இல்லை, இ-பாஸ் போன்ற சிறப்பு அனுமதிகள் அவசியம் இல்லை.
- கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர மற்ற இடங்களில், மத்திய அரசை கலந்தாலோசிக்காமல் ஊரடங்கை அமல்படுத்தக்கூடாது
- பள்ளி/கல்லூரிகள்/கல்வி நிலையங்கள் போன்றவை இயங்குவதற்கான தடை நீட்டிப்பு
- திரையரங்குள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் போன்றவை இயங்குவதற்கான தடை நீட்டிப்பு.
- கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு தீவிரமாக செயல்படுத்தப்படும்.
- திறந்தவெளி பகுதிகளில் உள்ள திரையரங்குகள் செப்டம்பர் 21 முதல் இயங்க அனுமதி
- விருப்பத்தின் பேரில், கட்டுப்பாட்டு பகுதிகளை சேராத 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் 50% வரை, பள்ளிகளுக்கு செல்லலாம் என அறிவிப்பு
- பதிவு செய்யபட்ட மையங்களில் திறன் மற்றும் தொழில் வளர்ச்சிக்கான பயிற்சிகளை தொடங்கலாம்
எனவும், மேலே குறிப்பிடப்பட்ட அனுமதிகல் கொரோனா முன்னெச்சரிக்கைகளுடன் பின்பற்ற வேண்டும் என மத்திய அரசின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.