கேரள சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக மெட்ரோ மேன் ஸ்ரீதரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
திருவனந்தபுரம் :
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் பிறந்த ஸ்ரீதரன் டெல்லி மற்றும் கொச்சி மெட்ரோ திட்டங்களின் தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் பா.ஜ.கவில் இணைத்தார். அப்போது கேரள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவதாகவும், கேரளாவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் முதல்வராக பதவி வகிக்கவும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்தநிலையில், கேரள சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.கவின் முதல்வர் வேட்பாளராக ஸ்ரீதரன் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக அம்மாநில தலைவர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மெட்ரோ மேன் ஸ்ரீ தரன் அளித்த பேட்டியில் கூறியதாவது ;
Read more – தமிழகத்தில் வாக்காளர் சீட்டு விரைவில் வழங்கப்படும் – தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு
மக்கள் தங்களுக்கு எது நல்லது, மாநிலத்திற்கு எது நல்லது? என்பதை நன்கு அறிவார்கள், அதனால்அவர்கள் பாஜகவை ஆட்சிக்கு தேர்ந்தெடுப்பார்கள் என்று நான் நம்புகிறேன். கேரளாவில் பாஜகவிற்கு மிக பெரிய வெற்றி கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.