சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாள்தோறும் 2 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கி கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர பூஜைகளை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் 15 ம் தேதி முதல் ஐயப்ப ஸ்வாமியை தரிசிக்க பக்கதர்களுக்கு நாள்தோறும் 1000 பேர் என்ற கணக்கில் அனுமதி அளிக்கப்பட்டு வந்தது.கொரோனா பரவல் காரணமாக வார நாட்களில் 1000 நபர்களும்,சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய வார இறுதி நாட்களில் தலா 2000 பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் சபரிமலை தரிசனத்திற்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க, திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பிலும்,தலைமை செயலாளர் விஸ்வாஸ் மேத்தா தலைமையிலான நிபுணர் குழுவும் சபரிமலையில் சாமி தரிசனத்திற்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கோரியும் கேரள அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.அதனைத்தொடர்ந்து கேரள அரசு வார நாட்களில் தினமும் 2 ஆயிரம் பக்தர்களும், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் 3 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும், மண்டல பூஜை நடைபெறும் டிசம்பர் 26 ம் தேதி மற்றும் மகர விளக்கு பூஜை. நடைபெறும் 2021 ஜனவரி 14 ஆகிய 2 நாட்கள் 6 ஆயிரம் பக்தர்கள் வீதம் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்என்றும் உத்தரவு பிறப்பித்தது.அதற்கான முன்பதிவு இன்று முதல் https://sabarimalaonline.org/#/darshan பக்கத்தில் தொடங்குகிறது.
கூடுதலாக தினமும் 1,000 பக்தர்கள் சாமியை தரிசனம் செய்ய அனுமதி அளித்ததால் பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.