கொரோனா தொற்று குறைந்த பிறகும் கூட ஏசி பெட்டிகளில் போர்வைகள் வழங்கமாட்டோம் என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
கொரோனா தொற்று பாதிப்பு குறைந்த பிறகும் கூட ஏசி பெட்டிகளில் பயணிகளுக்கு போர்வைகள் வழங்கப்படாது,மேலும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய படுக்கைகள் அல்லது பயணிகளே போர்வைகள் மற்றும் படுக்கை விரிப்புகளை கொண்டு வரவேண்டும் என்ற நடைமுறையை பின்பற்ற முடிவு செய்துள்ளோம்.ரெயில் பயணத்தின் போது சுத்தத்தை கடைபிடிக்க ரெயில்வே முடிவு செய்துள்ளது. இதன் ஒரு முயற்சியாகவே புதிய நடவடிக்கை கொண்டுவரப்பட இருக்கிறது”என்று ரெயில்வே வாரிய தலைவர் வினோத் குமார் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து ,500 ரெயில்களின் சேவையை ரெயில்வே நிர்வாகம் நிறுத்த இருப்பதாக வெளியான தகவலை முற்றிலும் மறுத்த அவர் ,எந்த ஒரு ரெயில் சேவையையும் நிறுத்தவோ, ரெயில் நிலையங்களை மூடவோ இதுவரை எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை என்று உறுதியளித்தார்.