இந்தியா – இங்கிலாந்து இடையேயான விமான சேவை 6 ம் தேதி முதல் தொடங்கும் என்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி :
இங்கிலாந்து நாட்டில் வளர்சிதை மாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த புதிய வைரஸானது சூழ்நிலைக்கு தகுந்தார் போல வளர்சிதை மாற்றம் அடைந்தும், இதன் பரவும் தன்மை 70 சதவீதம் அதிகம் உள்ளதாகவும் விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டிபிடித்துள்ளனர்.
இந்தநிலையில் இங்கிலாந்து நாட்டிற்கு செல்லும் விமான போக்குவரத்துக்களை பல்வேறு நாடுகள் தடை விதித்து வந்தது. இந்தியாவிலும் கடந்த 23 ம் தேதி முதல் இங்கிலாந்து நாட்டிற்கான போக்குவரத்து தடை விதித்தது.இதனைத்தொடர்ந்து, இங்கிலாந்திற்கான விமான போக்குவரத்து தடை வருகின்ற ஜனவரி மாதம் 7 ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
Read more – விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் குடியரசு தினத்தில் பேரணி நடக்கும் : விவசாய அமைப்பினர் எச்சரிக்கை
தற்போது, இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு வரும் 6 ம் தேதி முதல் விமான சேவை தொடங்கப்படும் என்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். மேலும், 30 விமானங்கள் வாரத்திற்கு இரு மார்க்கமாக இயக்கப்படும் என்றும், இந்த நடைமுறையானது ஜனவரி 23 ம் தேதி வரை அமல் படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.