வீட்டுப் பராமரிப்புப் பொருட்களைத் தயாரிக்கும் பயிற்சி வகுப்பு மே 6 முதல் 8 ந் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வீட்டுப் பரமாரிப்புப் பொருட்களைத் தயாரிக்கும் பயிற்சி வகுப்புகள் நாளை முதல் நடைபெற உள்ளது. மேலும் தொழிற்சாலைகளுக்கு உதவும் ரசாயனப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வகுப்புகளும் நாளை முதல் மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளது. இப்பயிற்சியானது காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
கட்டணம் மற்றும் கூடுதல் விபரங்களுக்கு : 8668102600