பட்டாக்கத்தியுடன் சுற்றிய கல்லூரி மாணவன் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.
செங்குன்றம் பகுதியில் இரண்டு பேர் கையில் பட்டாக்கத்தியுடன் சுற்றி திரிகின்றார் என போலீசாருக்கு தகவல் தெரிந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அந்த இடத்திற்கு விரைந்துள்ளார். அங்கு சென்று பார்த்ததில் பட்டாக்கத்தி முதலான பயங்கர ஆயுதங்களுடன் சிலர் சுற்றி வருவது உண்மை தான் என தெரியவரவே அந்த மர்ம நபர்களை பிடித்து விசாரித்துள்ளனர்.
அதில் அவர்கள் பாடியநல்லூர், ஜோதி நகரைச் சேர்ந்த பிரசாத், மற்றும் ஈஸ்வரன் கோயில் தெருவை சேர்ந்த விக்னேஸ்வரன் என்பதும் பிரசாத் மீது சோழவரம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் விக்னேஸ்வரன் மீனம்பாக்கம் தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்போது இருவரையும் கைது செய்தனர்.