அரியர் மாணவர்களுக்கு தமிழக அரசு தேர்ச்சி வழங்கியதை ஏற்க முடியாது என Aicte கூறிய விவகாரம் குறித்து தகவல் கிடைக்கவில்லை என உயர் கல்வி அமைச்சர் சொன்ன விவகாரம் பற்றி அண்ணா பல்கலை கழகம் விளக்கம் அளித்துள்ளது.
அரியர் மாணவர்களுக்கு தமிழக அரசு தேர்ச்சி வழங்கியதை ஏற்க முடியாது என AICTE தமிழக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கடிதம் அனுப்பியிருந்தது. இந்த நிலையில் அதுபோல எந்த கடிதமும் தங்களுக்கு வரவில்லை என உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மறுத்திருந்தார்.
இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா, AICTE யிடம் இருந்து கடந்த 30-ம் தேதியே கடிதம் வந்ததாகவும் அன்றைய தினமே உயர்கல்வித் துறைக்கு அதை அனுப்பி விட்டதாகவும் தெரிவித்திருக்கின்றார்.
மேலும் கடிதம் வரவில்லை என்று அமைச்சர் மறுத்தது குறித்து தான் எந்த கருத்தும் தெரிவிக்கவிரும்பவில்லை. கடந்த 30ஆம் தேதி முதல்முறை கடிதத்தை அனுப்பியதாகவும் நேற்று அமைச்சர் அன்பழகன் கடிதம் வரவில்லை என்று மறுத்த பின்பு மீண்டும் அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.