தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று காலை 9 மணியளவில் தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து சேலம் பயணம் மேற்கொள்கிறார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று காலை 9 மணியளவில் தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து சேலம் காமலாபுரம் விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து வாழப்பாடி செல்லும் அவர் அங்கு அமைந்துள்ள அரசு பள்ளியில் காலை 10 மணிக்கு நடக்கும் விழாவில் வருமுன் காப்போம் திட்டத்தை தொடர்ந்து தொடங்கி வைக்கவிருக்கிறார்.
அதனைத்தொடர்ந்து ஆத்தூருக்கு புறப்பட்டுச் செல்லும் அவர் புதிதாக கட்டப்பட்டுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை திறந்து வைக்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சேலம் வருகையை முன்னிட்டு, சேலம் சரக டி.ஐ.ஜி. மகேஷ்வரி, மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல்கோடா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் ஆகியோர் தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.