கோவையில் போதைப் பொருள் சப்ளை அதிகளவில் நடந்து வருகின்றது என்ற குற்றச்சாட்டு நிலவி வரும் சூழலில், கஞ்சா புழக்கத்திற்குக் காரணமாக இருந்த 2 இளைஞர்களை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கோவை துடியலூர் தடாகம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தடாகம் சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்பனை படு ஜோராக நடந்து வருவதாக அரசல் புரசலாகக் கூறப்பட்டது. குறிப்பிட்ட பகுதியில் கஞ்சாவை வாங்கிவிட்டு பொது இடங்கள் உள்படத் தடாகம் சாலையில் உள்ள பகுதிகளில் உள்ள இளைஞர்கள் மண்ணுக்குள் வுதைத்தது வைத்ததாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் குற்றம் சஷ்டி வந்துள்ளார்.
இதனால் போலீசார் அவர்களை ரகசியமாக கண்காணித்து உள்ளனர். இவரின் கண்காணிப்பில் இந்த இளைஞர்கள் தடாகம் சுடுகாட்டில் போதைப் பொருள் விற்பனை குறித்து போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து அங்கு விரைந்த போலீசார் இன்ஸ்பெக்டர் பால முரளி சுந்தரம், தனிப்படை காவலர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் பொன்ராஜ், சிவராஜ், ஆறுமுகம் உள்ளிட்டோர் குறிப்பிட்ட சுடுகாடு பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சம்பவ இடத்தில இரண்டு இளைஞர்கள் சந்தேகம் படுப்படியாக இருந்துள்ளனர். அவர்வகளை பிடித்து விசாரித்தபொது iஇந்த 2 பேரும் கஞ்சா விற்பனைக்காகக் கோவைக்கு வந்ததாக விசாரணையில் போலீசார் கண்டறிந்தனர். இவர்கள் பெயர் கருப்பசாமி, பாண்டியன் ஆகும். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 2 . 5 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மேலும் விசாரணை நடந்து வருகின்றது.