கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு தடுப்பு மையத்தில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகள் குத்தாட்டம் போட்டனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரசால் பாதிக்கப்படுவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.
நோயாளிகளுக்கும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ ஊழியர்களுக்கும் ஏற்படும் மன உளைச்சலை போக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள அரசு பல் மருத்துவமனை கொரோனா தடுப்பு மையமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலர் குழுவாக இணைந்து, மருத்துவமனை வளாகத்தில் ‘பிளாஸ் மாப்’ எனப்படும் எதிர்பாராத ஆடல், பாடலுக்கு நடனமாடினர். அவர்கள் முகக்கவசம் அணிந்தும், தனிநபர் இடைவெளியை கடைபிடித்தும் நடனமாடி தங்கள் மன அழுத்தத்தை குறைத்தனர்.
இந்த நடன நிகழ்ச்சி குடும்பத்தை பிரிந்து இருக்கும் தங்களுக்கு புத்துணர்ச்சியை தருவதாக வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் தெரிவித்துள்ளனர்.