இந்த க்ரீம் எல்லா வகையான சருமம் கொண்டவர்களுக்கும் பொருந்தும். இவை தோலை மிருதுவாகவும். பளபளப்பாகவும் வைத்திருக்கும். பாத வெடிப்பு, முட்டி கருமை என அனைத்து சருமப் பிரச்சனைகளுக்கும் இந்த க்ரீம் பயன்படுத்தலாம். இயற்கையாக வீட்டிலேயே தயாரிக்க கூடிய இந்த க்ரீம் சிறந்த மாய்சுரைசராகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
| சியா பட்டர் | 1/2 கப் |
| மேங்கோ பட்டர் | 1/2 கப் |
| பாடி பட்டர் | 1 கப் |
| தேன் மெழுகு | 1/4 கப் |
| கிராம்பு எண்ணெய் | 4 டீஸ்பூன் |
| அவகேடோ எண்ணெய் | 4 டீஸ்பூன் |
| தேங்காய் எண்ணெய் | 4 டீஸ்பூன் |
| ஆலிவ் எண்ணெய் | 4 டீஸ்பூன் |
| லாவண்டர் எண்ணெய் | 4 டீஸ்பூன் |
| வைட்டமின் இ எண்ணெய் | 4 டீஸ்பூன் |
| பாதாம் எண்ணெய் | 4 டீஸ்பூன் |
| டீ ட்ரி எண்ணெய் | 4 டீஸ்பூன் |
| நறுமண எண்ணெய் | 4 டீஸ்பூன் |
| குங்குமப்பூ எண்ணெய் | வாசனைக்கு |
தயாரிக்கும் முறை:
- இவை அனைத்துமே விலை உயர்ந்தவை. அதனால் உங்கள் தேவைக்கேற்ப அளவு வாங்கி கொள்ளுங்கள்.வீணாகாமல் கவனம் மெடுத்து தயாரித்து பயன்படுத்துங்கள்
- க்ரீம் வகைகள் தயாரிக்கும் போது அடுப்பில் டபுள் ஸ்டீம் முறையை பின்பற்ற வேண்டும். முதலில் அகன்ற அடிகனமான பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அதன் மீது வேறொரு அகலமான கிண்ணத்தில் பட்டர் வகைகளை சேர்த்து கலக்கினால் அவை உருகத் தொடங்கும்.
- அதன் பிறகு ஒவ்வொரு எண்ணெயாக சேர்த்து கலந்து வரவேண்டும். இவை அனைத்தையும் கலந்து மிதமான சூட்டில் வைத்து எடுத்தால் எல்லாம் உருகி ஒன்றோடு ஒன்று கலந்திருக்கும். அதிக சூடும் இராது.
- பிறகு இதை கீழே இறக்கி நறுமணத்துக்கு சேர்க்கப்படும் குங்குமப்பூ எண்ணெயை ஒரு டீஸ்பூன் விட்டு கலக்குங்கள்.
- சூடு மிதமான பதத்துக்கு வந்ததும் அதை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து ஒரு மணி நேரம் கழித்து எடுத்தால் அவை கெட்டியாகி இருக்கும்.
- பிறகு அதை பீட்டர் (Beater) கொண்டு நன்றாக அடிக்க வேண்டும். இப்படி செய்யும் போது கலவை நுரைத்து மேல் எழும்பி வரும்.
- பிறகு கண்ணாடி பாட்டிலில் அடைத்து இதைப் பயன்படுத்தலாம். இதை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து எடுத்து பயன்படுத்தலாம். வெளியில் வைத்தாலும் கெடாமல் இருக்கும். இதைத் தண்ணீர் பயன்படுத்தாமல் செய்திருக்கிறோம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நன்மைகள்:
- இதில் கலக்கும் டீ ட்ரீ ஆயில் கரும்புள்ளிகளை மறைய செய்யும்
- பாதாம் எண்ணெய் முகத்துக்கு பளபளப்பைக் கூட்டும்
- சியா பட்டர் முகத்துக்கு மென்மை தரும்
- கிராம்பு எண்ணெய் முகத்தில் பழைய செல்களை நீக்கும்
- ஆலிவ் எண்ணெய் வறட்சியைத் தடுக்கும்
- இந்த க்ரீமை எல்லா காலத்திலும் மழைக்காலம், குளிர்காலம், கோடைக்காலம் என மூன்று பருவ காலத்திலும் பயன்படுத்தலாம்.
- சிறந்த மாய்சுரைசராக இருக்கும். தோலின் கடினத்தன்மையை குறைத்து மிருதுவாக வைத்திருக்கும்.
ஒருமுறை இதைச் செய்து பயன்படுத்தி பாருங்கள்.




